Posts

Showing posts from September 18, 2025

அவள் ஒரு தொடர்கதை (கவிதை)

Image
அடங்காப்பிடாரி,   பைத்தியக்காரி,   அழுந்தக்பற்களை பதிக்கிறாள். நகங்களால் கீறி,  இரத்தத்தை சுவைக்கிறாள். அகோர சிரிப்புடன், மடியில் தலையை சாய்த்து,  அழுது,  இசைத்து,  மூணு மூணுக்கிறாள்,  தாலாட்டுகிறாள் ,  உதட்டில் முத்தமிட்டுமிடுகிறாள் , இறந்த மகனுக்கு  இடர் நேராதப்படி ... அவள் ஒரு தொடர்க்கதை..!

உயிர்மை(கவிதை)

Image
பயணப்பட்ட கால்களை, துரத்தி வந்த  கதைகளும், கவிதைகளும், அனுபவமும், வறுமையும்...             முற்றுப்புள்ளி வைக்க.                     உயிர் மை தீர்ந்த தருணம் அது.. .!

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)

Image
கோவில்பட்டியான் : அதலைக்காய், சிறுகிழங்கு, தீக்குச்சி, கடலைமிட்டாய் எங்கள்  கரிசல் மண்ணின் அடையாள வாசனைகள். இதேபோல சின்ன வயதில் இருந்தே அம்மாவின் வியர்வை படிந்த ஜாக்கெட்டின் வாசனை,ரூபாய் தாளின் வாசனை, வேட்டை நாய் மேல் வரும் வாசனை, ஆட்டுக் கொட்டாரங்களில் புலுக்கையின் வாசனை, சாணிகளை கரைத்து மொழுகிய வீட்டு முற்றத்தின் வாசனை,  பஜாரில் காபிக்கொட்டைகளை வறுக்கும் வாசனை, மஞ்சள், மல்லித்தலை மற்றும் மிளகாய் வற்றல் போன்றவை ரைஸ் மில்லில் அரைபடும் போது வரும் வாசனை, புதுத்துணியின் வாசனை, இவைகளுக்குள்தான் எப்பொழுதும் என் ஆன்மா சுழன்று கொண்டே இருக்கும்.  பக்கங்களை திருப்பினால்  அப்பளம் போல் உடையும் பழைய புத்தகத்தின் வாசனை ரொம்ப பிடிக்கும். இப்படியாக எல்லாமும் வாசனையாக உழன்று நினைவுகளாக இருந்தபோது,மறக்கமுடியாத நினைவுகளை என் வாழ்வில் உருவாக்கியது பழைய புத்தக கடைதான். வடக்கே கிருஷ்ணர் கோவில், தெற்கே செண்பகவல்லியம்மன் கோவில்,  மேற்கே பழைய பேருந்து நிலையம், கிழக்கே ரயில் நிலையம் இணையும் நாற்சந்தியில் ( நான்கு சாலை இணையும் இடத்தில்) கிருஷ்ணர் கோவில் போகும் வழியில் அந்த பழைய புத்தக கட...

காலத்தின் கடமை(கவிதை)

Image
ஆரம்பித்த இடத்தில்  முற்றுப்பெற்றுவிட்டேன், காதலால்..! அவ்விடத்திலேயே  தொடங்கி விட்டேன், அம்மாவின் கண்ணீரால்!

பட்டாம்பூச்சி (கவிதை)

Image
ஆண்டவன் கொடுத்த அழகை, அவனே அபகரித்ததில் ஆச்சரியமில்லை, எடுத்தவன் ' வண்ணங்களை ' மட்டுமே எடுத்தான். வாழ்க்கையை எடுக்கவில்லை.  நெருப்பில் சுட்ட கல்  வெப்பம் ஏற்று சிரிப்பது போல , நானும் சிரிக்கிறேன். வலியை தாங்கிய ' வண்ணமில்லா ' வண்ணத்துப்பூச்சியாய்...