அநீதி (கவிதை)
மரணச் செய்தி
காதுகளை துளைத்தது.
நினைவுகள் ஒரு நிமிடம், எட்டுக்கால்பூச்சி சிறு ஆறுதல் , சட்டென்று கவ்விப்பிடித்தது
என் காலில் உள்ள ஈ யை...
எங்கும் மரணம்...
'என் மேலும் நிகழ்த்தப்பட்டிருக்கறது'.
இந்த அநீதிக்கு எதிராக
போர் தொடுக்கவா..?
போராடவா...?
"நான் மனிதன்"
ஒரே அடியில் வீழ்த்த முடியும்.
ஈ ஆணா ? பெண்ணா ?
சிலந்தியும் இதனுள் அடக்கம்.
குழந்தைக்கான உணவா ? தனக்கான உணவா?
மரணம் அழகானது..!
விடுதலை தரக் கூடியது.
அப்படி நிறைவான,
மரணத்தை தரும்
சிந்தனையின் பிறப்பிடம் எது , ஒருவேளை வேசியிடம், மாற்றுத்திறனாளிடம், மூப்படைந்தவரிடம்,
ஏதும்அறியா குந்தையிடம், இருக்கலாம் .
"ஈ க்களே என் மீது அமராதிர் , சிலந்திகளே ..என் மீது வேட்டையாடதீர் ..
Comments
Post a Comment